Tuesday 16 February 2016

உங்களுக்கு தெரியுமா ஆறு சுவைகள் பற்றி




உங்களுக்கு தெரியுமா ஆறு சுவைகள் பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்

இனிப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

பயன்கள்

தசையை வளர்க்கும்  

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை  மனதிற்கும்,  உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

குறிப்பு

இனிப்புச் சுவை அதிகமானால்  உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.


காரச் சுவை 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது .

பயன்கள்

எலும்புகளை வளர்க்கும்


பசியுணர்வைத் தோற்றுவிக்கும், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்யும் . இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.


குறிப்பு

காரம் அதிகமானால்  உடல் எரிச்சலை ஏற்படும் . உடல் சூடு அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்றும்.


 துவர்ப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

 பயன்கள்

இரத்தத்தைப் பெருக்கும்

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது . அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும். இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யம்.


குறிப்பு 

துவர்ப்புச் சுவை  அதிகமானால் , இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.


புளிப்புச் சுவை
கிடைக்கும் உணவுப் பொருட்கள்

எலுமிச்சை, தயிர், மோர்,  இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, புளிச்ச கீரை, மாங்காய், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

 பயன்கள்

கொழுப்பினை அதிகரிக்கும்

உணவிற்கு ருசி சேர்க்கும் சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்யும் . இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

குறிப்பு 

புளிப்புச் சுவை அதிகமானால்  தாக உணர்வினை அதிகமாகும். பற்களைப் பாதிக்கப்படும் . நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

உவர்ப்புச் சுவை

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

உப்பு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


 பயன்கள்

உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும்

உவர்ப்பு தவிர்க்க இயலாத சுவை ஆகும் ,அளவோடு உணவில் சேர்த்துக்கொண்டால் அனைவராலும் விரும்பப்படும் . மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு பெறுகிறது .


குறிப்பு 

உவர்ப்பு சுவை  அதிகமானால் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகபடுத்தும், சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்றும்


கசப்புச் சுவை



கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை அதிகம் உள்ளது.


பயன்கள்

நரம்புகளை பலப்படுத்தும் 


அதிகம் வெறுக்கப்படும் சுவை ஆனால்  அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஆகும் . மற்றச் சுவைகளை அறிய இது உதவுகிறது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்தும். உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகிறது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

குறிப்பு 

கசப்புச் சுவை அதிகமானால்  உடலின் நீர் குறைந்துப் போகும்  மேனி வறண்டு கடினத்தன்மை பெரும் . எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல நேரிடும்


No comments:

Post a Comment